Sunday, December 02, 2007

Ninaivugalin mulumaiyana parimaanam...

Well... lately have fallen in love with thamizh kavithaigal…(tamil poems)..

And a particular reason for that is, I stumbled on the following lines from a college mate of mine...Kanavugalin Kaadhali...

This love of mine is been now fed and getting nourished by poems of her…
This face of me is called as “Rasigan” – a literature buff .

Avaludaiya padaipugalil sila muthukal itho …


உனக்காக எழுதப்படும் கவிதைகளில்
உண்மை இருக்கிறதா - தெரியாது !
ஆனால் ...
காதல் இருக்கிறது ;)
========================

உனக்கான என் காதல் கவிதைகளில் ,
எனக்கு மிகவும் பிடித்தது..

நம் குழந்தை ;)
========================


என் கண்ணீர் + என் கவிதை = நீ !!!

நீ தப்பிச் செல்ல கூடாதென்று ,
மனத்தினில் மறைத்து வைத்தேன் ...
என்ன பிரயோஜனம் ...
பலநேரங்களில் ...கண்ணீராய் மாறி
விழிகளின் வழியாக வெளியேறி விடுகிறாய்...
சில நேரங்களில் ... கவிதையாய் ..!
========================

காதல் = சுவாசம் ???!!!

உன்னை நான் சந்திக்காமல் இருந்திருந்தால்...
சுவாசிக்காமல் உயிர் வாழும் வித்(ந்)தை மட்டும் அறிந்திருப்பேன் !

======================
வட்டப்பாதை
~~~~~~~
விலகலாம் என்றெண்ணி
எதிரெதிர் திசையில் பயணிக்க துவங்கினோம்....
அப்பொழுது நாம் அறிந்திருக்கவில்லை,
நாம் பயணிக்க போவது வட்டப்பாதையில் என்று..

======================

நெஞ்சில் மிச்சம் ...
~~~~~~~~~
கோப்பையில் மிஞ்சிய சில துளி தேனீர்...
சீப்பை ஜீவனாக்கிக் கொண்ட மயிர் கற்றைகள்...
ஜன்னல் கம்பியில் விளையாடும் துருப்பிடித்த மழை துளிகள்...
இவ்வாறு மிஞ்சிய விஷயங்களை பார்க்கும்போதெல்லாம்,
நெஞ்சில் எஞ்சிய உன் நினைவுகள்!

========================

டிக்...டிக்...டிக்...
உனக்கான நிமிடங்களையும்...
எனக்கான நிமிடங்களையும்....
நமக்கானதாக மாற்றுகிறது -
- காதல் கடிகாரம் ;)

=========================

வெட்கத்தைக் கேட்டால் நீ என்ன தருவாய்......?
காதலை !!!!!!!

========>Kanuvugalin Kaadhali<==========

No comments: