Showing posts with label Nee paartha paarvaiku nandri... Show all posts
Showing posts with label Nee paartha paarvaiku nandri... Show all posts

Thursday, December 27, 2007

Few more thamizh pearls from ....Kanavugalin Kadhali...

இந்த முத்து சிதறல்களை என்னுடைய இணைய தளத்தில் வெளியிட அனுமதி அளித்த கனவுகளின் காதலிக்கு என் நன்றி.....

மழை துளிகள் மண்ணில் தங்குவதில்லை - அதற்காக
மழை பெய்யாமல் இருப்பதில்லை !

======================
காதலின் வெம்மையை விட - பிரிவின்
நிழல் சில நேரங்களில் மேலானது !

====================
நீ.. நான்.. காதல்..

தனியாக நடந்து கொண்டிருந்தேன் ...
ஒரு காலடிச் சத்தம் ...
திரும்பினால் ... நீ !
இருவரும் நடந்து கொண்டிருந்தோம்...
யாரோ நம்முடன் வருவது போல் உணர்தோம்..
அட - காதல் !
பின் மூவருமாக நடக்கத் துவங்கினோம்....!!!

=================

காதல் தீரும் பொழுது - கண்ணீரும்
தீர்ந்து போகும் !

=================

என் பேனா உனக்காக எழுத மறுக்கிறது...

ஒற்றை பார்வை சொல்லாத காதலையா ,
இத்தனை வார்த்தைகள் சொல்லிவிடக்கூடும் ...
======================

இயல்பாக நடக்கும் எல்லா விஷயங்களையும்
மனம் சமநிலையில் ஏற்றுகொள்வதில்லை.

உதாரணம் - நாம் விரும்பியதும் .. விலகியதும்.


####### My addition to this ##########
நாம் பார்த்ததும் -- விரும்பியதும்... விலகியதும் -- ஒரு புதிய காவியம்...
#################


====================
எத்தனை அவசரம்
உன் கண்களுக்கு ....
உனக்கு முன்பாக ,
உன் காதலைச் சொல்வதற்கு !
===================

நான் சரியாக செய்த தவறு -
உன்னை விரும்பியது !

======================